Monday, December 7, 2009

NIFTY - An overview

நண்பர்களே,
தேசிய பங்கு சந்தை இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் உள்ள எந்த ஒரு பொதுத  துறை  (CORPORATE /PSU) நிறுவனத்தின் பங்கையும் வாங்க விற்க ஏற்புடைய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.எனவே இங்கு நடைபெறும் பங்கு வணிகம் பெரிய அளவுடையதாக இருக்கிறது. சரி மஞ்சள், தக்காளி, கத்தரி என நாம் அன்றாடம் பயன்படுத்தும் சரக்குகளை கொண்டே NIFTY - ஐ புரிந்து கொள்வோம். காலையில் மார்க்கெட்டுக்கு போனிங்களே , விலைவாசி எப்படி ? என்று நண்பரோ, மனைவியோ கேட்டால் , கத்தரி , வெண்டை, தக்காளி, இப்படி எல்லாம் நேற்றைவிட இன்று அதிகம் என்றால் என்ன சொல்லுவோம் ? விலையெல்லாம் ஏறி போச்சுன்னு சொல்லுவோமில்ல , அப்படி முக்கியமான 50 பங்குகள கணக்குல வைச்சு  NSE சந்தை ஏற்றம் அல்லது இறக்கம் அப்படின்னு சொல்லுறாங்க , அதுதான் NIFTY- ங்கிற பெயரால சொல்லப்படுவது, இந்த ஏற்றம் அல்லது இறக்கம் நமக்கு பணம் பண்ண உதவுமா ? அட ஆமாங்க  , பின்ன எதுக்கு இந்த  BLOG ? ,நம்ம தமிழ் சமுதாயதுக்கு என்னால் முடியிறத செய்யனுமுன்னு நினைக்கிறேனில்ல  ,சரி மேட்டருக்கு வருவோம், இன்னிக்கு சந்தையில சரக்குகள் வெல ஏறி போயிடுமுன்னு நேத்தே எல்லாம் வாங்க சொன்னேனா இல்லையா ? அப்படி வீட்டில சொல்லுவாங்க இல்ல ,அப்படி தான் நாமும் விலை அதிகமாகுமுன்னா Nifty ய வாங்கணும் , லாபம் கிடசுட்ட வித்துட்டு வீட்டுக்கு வந்திடனும் ,இன்னொரு கை பாக்கிறதெல்லாம் இந்த சந்தைக்கு ஆகாது, உறவுகளே பணம் போனால் வராது, வந்தத பத்திரமா cheque போட்டு வாங்க கத்துக்கலன்னா , கதை முடிஞ்சிடும் , பொருள் புதையலான இந்த சந்தைய குறை சொல்லாதீங்க,  தொடரும்...

No comments: