Monday, March 17, 2014

காலம் கனிகிறது ! கனவு உயிர் பெறுகிறது !!
பேரா இயற்கையே ,பெருவெளியே , உள்ளொளியே பணிந்து வணங்குகிறேன். கலங்கி போன நேரங்களில் எல்லாம் கருத்தினில் வந்து பயமும் பதட்டமும் இன்றி உள்ளுணர்வாய் தோன்றி என்னை முன்னெடுத்து செல்லும் எம் பொருள்  தந்த குல தேவரே பணிந்து வணங்குகிறேன். எம் குல காவலனாம் "கருப்பண்ணன் " என பெயர் சூட்டி , உயிரில் கரைந்து உணர்வில் மறைந்து வழிகாட்டியாய் என் நெஞ்சில் வாழும் தாத்தா உம்மை பணிந்து வணங்குகிறேன். 





இரண்டு ஆண்டு களுக்கு முன், தற்போதைய பணிக்கு செல்லுமுன்னே காலம் சொல்லும் திசையில் பயணம் செல்லும் தலைப்பில்  எழுதி விட்டு ...



1.சொத்துருவாக்கம் & நிர்வாகம் - நிறுவனம் (asset creation and management company)

2.ராக்கியண்ணன் - அழகுநாச்சியார் அறக்கட்டளையின் கீழ் நமது "அருவி கல்வி நிறுவனங்கள்" 

3.உற்பத்திசார்ந்த தொழில் நிறுவனம் (production  oriented company)

4.தலைமையகத்தை நோக்கிய பயணம் 



இந்த கனவுகள் கரைந்து போயினவோ என்ற ஏக்கத்துடன்... வெளியில் அழைக்கப்பட்டேன்..

கொங்கு நாட்டுக்குள் செல்லாமல் எல்லை காட்டுக்கு காலம் ஏன் அழைத்தது என்பது காரணம் புரிகிறது , காலம் கனிகிறது...கனவுகள் உயிர் பெறும் வேலை வருகிறது...

கடுகியே வந்தென் கருத்தினில் நின்று நினைத்த தெல்லாம் நீயே முடித்து மனத்துயர் தீர்ப்பாய் மதகரி சரணம்!

 மனத்துயர் நீங்க ,பொருள் தந்த எம் குலம் விளங்க கொங்குகுலமகளே வருக...

கொங்கு வாழ்த்து :
http://konguvellalar.net.in/wp-content/uploads/2011/11/kvg-mangalaVazhthu.mp3

No comments: